டென்மார்க்கில் தமிழர் நடுவம் சார்பில் நூல் வெளியீட்டு விழா!

Political

புதுமாத்தளன் சோகங்களுக்கு புதுமருந்திட்ட இயக்குநர் மற்றும் எழுத்தாளர், தோழர் கி.சே.துரை அவர்கள் எழுதி #தமிழர்_நடுவம் சார்பில் வெளியீடு பெற்ற “கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா…?
(சர்வதேச விவகார முதல் தமிழ் இராஜதந்திர நூல்)” என்கிற சர்வதேச இராஜதந்திர நகர்வுகளைப் பற்றி பேசும் நுண் அரசியல் நூலானது தமிழகத்தை தொடர்ந்து டென்மார்க் தேசத்திலும் வெளியீடு பெற இருக்கிறது…!

மறைந்த தமிழர் நடுவத்தின் நிறுவனர்&தலைவர், தமிழர் தேசிய அரசியலின் தந்தை, மேதகு செல்வா பாண்டியர் அவர்கள் தன் இறுதி நிமிடங்களை மேற்காணும் புத்தகத்தோடு செலவிட்டிருந்தார் என்பது இப்புத்தகத்திற்கு தனிச்சிறப்பு…!

புத்தக வெளியீட்டை தொடர்ந்து உலகத் தமிழர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை பெற்றிருந்த, தமிழர்களின் விடியலாக எதிர்பார்க்கப்பட்டு எதிர்பாராத சாலை விபத்தொன்றில் அகால மரணமடைந்த தமிழர் நடுவத்தின் நிறுவனர்&தலைவர், தமிழர் தேசிய அரசியலின் தந்தை மேதகு செல்வா பாண்டியர் மற்றும் பாண்டியர் படை தளபதி சுரேஸ் குடும்பனாரின் உருவப்பட திரை நீக்கமும், மேற்கண்ட புத்தகத்தின் விமர்சன அரங்கும், விருந்துபசாரமும், இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது…!

தேசிய இன அரசியலை கையில் எடுத்திருக்கும் தமிழர்களின் இன விடுதலை என்பது சர்வதேச தமிழ் இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது என்று கருதிய தோழர் செல்வா பாண்டியர் அவர்கள் தமிழ் இளைஞர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளையும் அதன் நுணுக்கங்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்று கருதியதால் மேற்கண்ட புத்தகத்தை வெளியீடு செய்ய மிகவும் பிரயாசைப் பட்டார், இன்று புத்தகம் வெளிவந்துள்ள நிலையில் அவர் நம்மோடு இல்லை என்பது நம்மை மிகவும் கவலைகொள்ளச் செய்யும் விடயமாக இருந்தாலும் அவர் நோக்கம் வெல்லும்போது அந்த கவலையெல்லாம் காற்றோடு கலைந்து போகும் தோழர்களே, பாண்டியர் மீதும் தமிழர் தேசிய அதிகாரத்தின் மீதும் நாட்டமுள்ள அனைவரும் மேற்காணும் நிகழ்வுகளில் தவறாது கலந்துகொண்டு ஒத்துழைக்கும்படி அழைக்கிறோம்,

நன்றி.

தமிழர் நடுவம்
(World Intellectual tamil youth organization)


1 thought on “டென்மார்க்கில் தமிழர் நடுவம் சார்பில் நூல் வெளியீட்டு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *