திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்:

திருவாரூர் இடைத்தேர்தலும்! தேவேந்திர குல வேளாளரும்!

Devendra Kula Vellalar Political



A very well written message by Mr. Marutham Mari on the possible political strategy to be adopted by the people of Devendra Kula Vellalar community in the context of the by-election to the Tiruvarur MLA constituency having been announced by the Election Commission to be held on the 28th of January 2019 .

This will be the first ” General Constituency ” to be won, if every goes well in mobilising and creating the awareness among the DKV community people, considering the arithmetic of the available voters, with the DKV community votes being more than half of the total number.

There will be absolutely no chance of the DKV community candidate being lost in the proposed by-election, taking into account the numerically dominant voters of the DKV community people.

Well done! and Congratulations to Mr. Marutham Mari.

The message received is forwarded as received for information.

? ? ? ? ?

திருவாரூர் இடைத்தேர்தலும்!

தேவேந்திர குல வேளாளரும்!

இத்தனை ஆண்டுகாலம் நம்மை ஒடுக்குவதற்கு காரணமானவர்களை வீழ்த்துவதற்கு நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்கு துவங்கப்பட்டதோ அங்கேயே அதற்கு இறுதிப்புள்ளி வைப்பதற்கான காலசுழ்நிலையை காலம் நிர்ணயம் செய்துள்ளது.

இதுநாள் வரை சனநாயகம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிய கூட்டங்களுக்கு அதே சனநாயகத்தை வைத்து
அவர்களை வீழ்த்துவோம்.

கடந்தக்கால தேர்தல் வரை திராவிடத்தை நம்பினோம், ஒவ்வொரு முறையும் நம்மை ஏமாற்ற முட்டாளாக்கினார்கள். ஆனால் இந்த முறை அவர்களை
முட்டாள் ஆக்குவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை இந்திரன்
நமக்கு அளித்துள்ளார்.

திருவாரூர் தொகுதியில் நமது வாக்குவங்கி தான் பெரும்பான்மை ஆதலால் நம்மால் உறுதியாக துரோகிகளை வீழ்த்தலாம்.

தேவேந்திரன் வாக்கு தேவேந்திரனுக்கே என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்று அங்கு வாழும் நமது உறவுகள் தேர்தல் களப்பணிகளில் கிராமம், கிராமமாக ஈடுபட வேண்டும்.

தமிழகத்தில் வாழும் அனைத்து தேவேந்திரகுல வேளாளர்
இளைஞர்களும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அங்கு விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக பணிபுரிய வேண்டும்.

கட்சி, இயக்கம், அமைப்பு, போன்றவகளை கடந்து சமூகமாக இந்த தேர்தலை அணுக வேண்டும்.

நமது சமூகம் சார்ந்த கட்சிகள்,
அமைப்புகள்,
இயக்கங்கள்,
இணைந்து
ஒரே வேட்பாளரை தேர்ந்தெடுத்து
அனைவரும் அவருக்காக
தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம்.

இதில் பிரிவினை இல்லாமல் நமக்குள் முரண் இல்லாமல்
நாம் ஒற்றுமையாக செயல்படவேண்டும்.

திருவாரூர் தொகுதியில்
ஆண்கள் =1,25,356
பெண்கள்=1,27,661
மூ.பாலின= 13
மொத்தம்= 253030 வாக்குகள்,
இதில் பாதி 126515 வாக்குகள்,

அனைத்து கட்சிகளும் தேர்தலில் களம் இறங்க வேண்டிய
நிர்பந்த நிலை இருப்பதால் நாம் 80000 வாக்குகள் பெற்றால்
வெற்றி பெற்று விடலாம்.

நமது இலக்கு 100000 வாக்குகள் வாங்குவதற்கு திட்டமிட்டு
பணியாற்ற வேண்டும். அப்போது தான் நாம் திட்டமிட்ட
வாக்கு நமக்கு வந்து சேரும்.

திருவாரூர் தொகுதியில் உள்ள நமது கிராமங்கள பட்டியல் செய்து அவற்றை பிரித்து குழுக்கள் அமைத்து, நாம் தேர்தல் பணிகளில் ஈடுபடுவோம்.

இந்த பகுதி திராவிட, கம்யூனிச, தலீத்திய சிந்தனைகள் இருந்தால் அவர்களால் நம் சமூகம் அடைந்த
பலன்கள் என்ன?
பலவீனம் என்ன ?
என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் வகையில்
நாம் தேர்தல் பிரச்சார முறைகளை கையாள வேண்டும்.

நமது வேட்பாளருக்கு அனைத்து உதவிகள் மற்றும்
அவருக்கு உறுதுணையாக தமிழகம் முழுவதும் உள்ள
தேவேந்திரகுல வேளாளர் சமூகம் செயல்பட்டு இந்த வரலாற்று அனைவரும் பாடுபட வேண்டும்.

வரலாற்று சுழற்சி்க்கு இந்த வரலாற்று வெற்றி அவசியமாக தேவைப்படுகிறது.

அறமே வெல்லும்! பாண்டியம் மீளும்!

சமூகப்பற்றுடன்
மருதம் மாரி




1 thought on “திருவாரூர் இடைத்தேர்தலும்! தேவேந்திர குல வேளாளரும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *