ambedkar

Artisans of Indian Constitution, Ratna, Dr. Myriads of salutes to Babasaheb Ambedkar on a day of day!!

Social

#சட்டதிருத்தமே..
கண்ணீரோடு மறைந்தார்….. திரும்ப வருவாரா………?
உலகில் எப்போதாவது ஒருமுறைத் தோன்றும் அதிசயத்தைப் போல புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்.. ….. வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்..
தன் கடைசி நாள்களில் கண்ணீரோடு வாழ்ந்தார்.. ஏன் ?? அது குறித்து அவரது உதவியாளர் நானக் சந்த் ரட்டுவிடம் அவர் கூறினார்..
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்களையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர். ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.
புரட்சியாளர் விட்டுச்சென்ற 58வது நினைவு நாள்


1 thought on “Artisans of Indian Constitution, Ratna, Dr. Myriads of salutes to Babasaheb Ambedkar on a day of day!!

  1. பட்டியல் வெளியேற்றம் கடைபிடிக்கும் நேரத்தில் அம்பேத்கர் பற்றி செய்திகளே தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *