மள்ளர்களின் மீதான ஒடுக்குமுறையும், மறைக்கப்படும் உண்மைகளும்!

Devendra Kula Vellalar

வெட்டியவர்கள் முக்குலத்தோர் என தெளிவாக தெரிந்தபின்பும் திராவிடத்தையும் தலித்தியத்தையும் சாடுவதேன்,,
என அப்பாவியாக கேட்கிறார்கள் மள்ளர்கள் சிலர்!

சரி யாரை பலியாக்கலாம் சொல்லுங்கள்!
நாமும் கையில் கிடைத்த நாலு முக்குலத்தோரை பிடித்து கண்டந்துண்டமாக வெட்டியெறியலாமா?

அதைத்தான் விரும்புகிறது திராவிடமும், தலித்தியமும்!
தீண்டாமை கொடுமை, ஆதிக்கசாதி அட்டூழியம், என புதிதுபுதிதாக பெயர் கொடுப்பதன் மூலம் இருசமூகத்தையும் ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கிறது.

முக்குலத்தோரா வர்ணாசிரமத்தை கொண்டுவந்தார்கள்?
அந்த ஆவாரங்காடு கும்பல் என்ன வர்ணாசிரமத்தை மீறுவோரின் கைகால்களை வெட்டுவதை கடமையாகவா செய்கிறது?

உண்மையில் அவர்கள் நிலமில்லாத, படிப்பறிவும் இல்லாத,
கஞ்சாவுக்கு அடிமையாகி கண்டவனையும் மிரட்டி காசுபறிக்கிற போக்கிரிக்கும்பல்,
இவர்களால் மற்ற சமூகத்திற்கு மட்டுமல்ல சொந்த(முக்குலத்தோர்) சமூகத்திற்கே பிரச்சனைதான்!
இத்தகைய கும்பல் ஆங்காங்கு இருக்கிறது,
அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சொல்ல முடியாது.

இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம்?
இவர்களை தூண்டிவிடுவது யார்?
காவல்துறையின் குண்டாந்தடிகள் இவர்கள் மீது படாமல் பாதுகாப்பது யார்?
ஜாமீன் எடுப்பது யார்?
வழக்கு நடத்துவது யார்?
அதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம்?

இப்படியாக யோசிப்போமானால்,, மள்ளர்கள் மட்டும் ஏன் பாதிக்கப்படுகிறார்கள்,
அரசு ஏன் பாராமுகமாக இருக்கிறது என புரிந்து கொள்ளலாம்,

கச்சநத்தம் மள்ளர்கள் ஒன்றும் பண்ணையடிமைகளில்லை,
சொந்த நிலத்தில் உழுதுவாழும் சிறுவிவசாயிகள்!
இவர்கள் நிலத்திற்கு பாயும் முறைதண்ணீரை அடாவடியாக திருப்பிவிடுவது,
அரட்டுவது, மிரட்டுவது என அட்டூழியங்கள் செய்வதன்மூலம் அடிமாட்டு விலைக்கு அவர்களது நிலங்களை அபகரிப்பது என்பதுதான் படுகொலைக்கான மூலகாரணம்!
அடித்த நிலத்தை பங்குபோடுவதில்,, சாதித்தலைவர்கள், அரசியல்வாதிகள்,
அதிகாரிகள்,
காவல்துறையினர் எல்லோரும் அடக்கம்,
இவர்கள்தான் சாதிக்கலவரங்களை பின்னின்று இயக்குபவர்கள்!
மள்ளர்கள் வலிமையாக உள்ள ஊர்களில் திருப்பித்தாக்குவதன் மூலம் வாழ்வாதாரங்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

ஆண்டபரம்பரை என போதையேற்றுவதிலும், அடிமை பரம்பரை என தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்வதிலும் திராவிட கருத்தியல் இங்கே வெற்றி பெற்றிருக்கிறது!
இப்படி இரண்டு சாதிகளும் சன்டையிட்டு மடிவதால் ஆட்சியதிகாரத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்கிறது!

தலித்தியம் ஒன்றும் புரட்சிகர தத்துவமல்ல,
அது ஆரிய, திராவிடம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தை!
SC vs Bc என்கிற கருத்தாக்கத்தை இங்கு தலித்தியத்தை வைத்து ஆழமாக விதைத்து விட்டது திராவிடம்தான்!

மருத்துவர் கிருஷ்ணசாமி தலித்தியம் பேசியபோது தடவிக் கொடுத்த திராவிடம்,
அவர் அதிகார அரசியலை முன்னெடுத்தபோது சாதித் தலைவர் என ஒதுக்கியது,
இப்போது அடையாள மீட்பு என்று பேசுகிறபோது பதறுகிறது!
தலித்தியத்தை வைத்து கீழறுப்பு வேலையை செய்கிறது!

கொடியங்குளம் சம்பவத்தின்போது,
சுப்பிரமணிய சுவாமியிலிருந்து,
தலித்திய குழுக்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,
திமுக, கம்யூனிஸ்ட் என அத்தனையும் துணைக்கு வந்தது,

அவர் தேயிலைத்தோட்ட தொழிலாளிகளின் பிரச்சனையை கையிலெடுத்தபோது,

70 ரூபாய் கூலியை 100 ரூபாயாக உயர்த்திக் கேட்டதுதான் தாமதம்,
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் எல்லாம் சுக்குநூறாக நொறுங்கி புதிய தமிழகத்தில் அணிசேர்ந்தது!

தோட்டத் தொழிலாளர்களில் பறையர், மறவர் என பலபட்ட சாதிகளும் உண்டு, மள்ளர்கள் அதிகம் அவ்வளவுதான்!
அந்த பின்புலத்தை வைத்து அவர் கூலி உயர்வு மட்டும் கேட்கவில்லை,
99 ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாவதால் அந்த எஸ்டேட்டை அதை உருவாக்கிய தொழிலாளர்களுக்கே பிரித்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்!
இதுவென்ன சாதியக்கோரிக்கையா?
எவ்வளவு புரட்சிகரமான கோரிக்கை,
அரண்டது அரசாங்கம்,
தாமிரபரணியை ரத்த ஆறாக மாற்றியது!
கொஞ்ச காலத்திற்கு பிறகு கூலியை 150 ரூபாயாக மாற்றியதையும் அறிவோம்!

100 ரூபாய் கேட்டபோது கிண்டல் செய்தவர்கள் 150 ரூபாய் கொடுத்தபோது வெட்கப்படவில்லை!
எப்படி அது சாத்தியமாயிற்று,
எதனால் கொடுத்தார்கள் என எவரும் ஆராயவுமில்லை,,
ஆனால் அதிலிருந்துதான் அவர் சாதித்தலைவராக ஒதுக்கப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,

இப்போது அடையாள மீட்பு எனச் சொன்னவுடன் ஏன் அலருகிறார்கள்!
பட்டியல் வெளியேற்றம் என்று சொன்னவுடன் ஏன் பதறுகிறார்கள்!

ஆண்டபரம்பரை என மறவர்கள் சொன்னபோது அமைதிகாத்தவர்கள்!
அதையே மள்ளர்கள் சொல்கிறபோது அதிர்ச்சி அடைகிறார்களே ஏன்?

ஆரிய அடிமை, ஆர்எஸ்எஸ் கைக்கூலி என பிதற்றுவது ஏன்?
கூட்டணி பேச்சே நடந்ததாக தெரியவில்லை, அதற்குள் ஏன் ஆர்எஸ்எஸ்சோடு கோர்த்து விடுகிறார்கள்?

இதுவரை பாஜகவோடு(திமுக) கூட்டணி வைத்து ஆட்சியில் பங்குபெற்ற போதெல்லாம் வராத பூகம்பம்,
கிருஷ்ணசாமி கூட்டணி வைத்தால் வந்துவிடுமா என்ன,,

ஏன் அதையே சொல்கிறார்கள்,,
அடையாளமும் அதிகாரமும் அடைந்துவிடக்கூடாது என்பதிலே எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பாருங்கள்,,

மருத்துவர் கிருஷ்ணசாமி திமுகவிலேயே நீடித்திருந்தால் அவரும் ஒரு குறுநில மன்னர்போன்று பெரம்பலூர் ராஜா போல வலம் வரலாம்தான்!
அவர் மள்ளர் அரசியலை கையில் எடுத்ததால்தான்,,,
சோதனைகளும் வேதனைகளும்,

இதை மள்ளர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

AVK பண்ணாடி,
கோவை.


2 thoughts on “மள்ளர்களின் மீதான ஒடுக்குமுறையும், மறைக்கப்படும் உண்மைகளும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *