devendran

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீர தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த மாடுபிடி வீரர் திரு.அஜய்

Devendra Kula Vellalar Jallikattu Mallar/Pallar

*அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீர தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த மாடுபிடி வீரர் திரு.அஜய் 8 காளைகளை அடக்கி தமிழக அரசு வழங்கிய காரை பரிசாக பெற்றுள்ளார்கள்.*
************************************************************
உன்னின் காலுக்கருகில் கைகட்டி உட்கார்ந்திருப்பவனை வீராதி வீரனெனவும் வீராதி வீரன்களையெல்லாம் வெறும் சோம்பைகள் போலவும் திரைப்படம் வேண்டுமானல் நீ எடுத்துக் கொள்ளலாம்…

வரலாறு அற்ற நீ என் வரலாற்றை அழிக்க உன் கூலிப்படைகளுக்கு என் வரலாற்றை போலி பத்திரம் போட்டும் கொடுக்கலாம்…

ஆனால் எம்மின் பாரம்பர்யத்தையும் பண்பாட்டையும் எம் ரத்தத்திலிருந்து வேறு எவருக்கும் எந்த கொம்பனாலும் மாற்றிக் கொடுத்திட இயலாது. அது மரபணு சார்ந்தது. அது எத்தனை அடக்கினாலும் எவ்வழியேனும் வெளிப்பட்டே தீரும்…

எமக்கு சொந்தமான எம்மிடமிருந்த எம்மின் ஏறுதழுவல் தலைமையைத்தான் உன்னால் பறிக்கமுடிந்ததே தவிர எம்மின் மரபிலே ஊறிய எம்மின் ஆண்மையை வீரத்தை உங்கொப்பனால் உன்னால் மட்டுமல்ல உன் சந்ததிகளாலும் கூட முடியாது…

#அலங்காநல்லூர்_ஏறுதழுவல் வழக்கானது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணின் மைந்தர்களான மள்ளர்களின் தலைமையில் இருந்தபோது வெறும் 300 ஆண்டுகளுக்குமுன் எம்மண்ணில் நுழைந்த வடுகர்கள் இன்று அத்தலைமையைத் தட்டிப் பறித்தனர்…

உங்களின் அதிகாரத்தினால் எம்மின் அதிகாரத்தைத்தான் வீழ்த்த முடிந்ததே தவிர எங்களின் வீரத்தை ஒருக்காலும் உங்களால் உங்களுடையதாக்கிக் கொள்ள முடியாது என மள்ளர் குலத்தின் சார்பாக மீண்டுமொருமுறை வென்று காட்டியிருக்கிறார் எம் தமிழின தவப்புதல்வன் மள்ளர்குல மாவீரன் அஜய்.

#அலங்காநல்லூர் ஏறுதழுவலில் அதிக காளைகளை(8 காளைகள்) அடக்கி முதலிடம் பிடித்து சிறந்த வீரனென தமிழக அரசால் போற்றப்பட்டு ஒரு மகிழுந்தும் இன்னும் பல பரிசுகளையும் தன் காலடியில் குவித்த மள்ளர் ஏறே வாழ்த்துக்கள்….


2 thoughts on “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வீர தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சார்ந்த மாடுபிடி வீரர் திரு.அஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *