அநீதியான அரசபயங்கரவாத நிகழ்வு – ஜீலை 23 தாமிரபரணி படுகொலை!

Devendra Kula Vellalar

சர்வதேச வல்லாதிக்கம் எப்போதும் பூர்வ குடிகள் அழிப்பில் இருந்தே தனது போர் தந்திரத்தை தொடங்கும் அதற்கு அவை அந்த மண்ணில் போலி கருத்தியல்களை உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளும்….

தமிழர்களை சுரண்டி ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்த திரிவடுகர்களின கருத்தியல் தளமான திராவிடம் தனது உண்மை முதாலளிகளான சர்வதேச ஏகாதிபத்தியத்தின் கிளை அமைப்பாக தான் தமிழகத்தின் செயல்பட்டுவருகிறது
என்பதை வரலாறு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான அரசபயங்கரவாதங்கள் அடக்குமுறைகளே, நிலைத்த சாட்சியாக இன்றும் நம் கண் முன்உள்ளது தோழர்களே…

பல்வேறு தேசிய இனங்களின் எழுச்சி என்பதினை ஒரு காலமும் சர்வதேசிய வல்லாதிக்கமும் அதன் கங்காணி தமிழக கிளை அமைப்பான திராவிடமும் திறன்பட நடக்க விடாமல் தடுப்பதில் தம் பணியை செவ்வனே செய்து வருகின்றன தோழர்களே…

இதனை புரிந்து கொள்ள கூட இங்கு இன மீட்பர்களாக பேசப்படும் பல அறிவு ஜீவிகளுக்கே புரியவில்லை என்பது தான் கள எதார்த்தம் தோழர்களே…

சர்வதேச முதலாளித்துவ வல்லாதிக்கம் இயற்கை வளங்கள் , கனிமவளங்கள் சுரண்டல் , என பூர்வீக தமிழர் தேசிய மண்ணின் மீதும் மக்கள் மீதான அடக்குமுறையை திராவிட கங்காணிகள் வழியாக தொடர்ச்சியாக செய்து வருகிறது தோழர்களே…

இங்கு இந்த மண்ணில் இந்த மக்களுக்கு எதிராக ,மண்ணுக்கு எதிராக என்ன சதி வலைகள் பின்னப்படுகிறது, அதற்கு சூத்திரதாரிகள் யார் என்பதை கூட அறிய விடாமல் மக்களை அவர்கள் எதிரியை, எதிரிகளின் பிரிதிநிதிகளாக செயல்படுபவர்களை அடையாளம் காண விடாமல் காப்பாத்த போலி பொதுவுடமைவாதிகளும், தலித்தியம், தமிழ் தமிழ் என பேசும் பட்டிமன்ற பேச்சாளர்கள் தலைமையிலான தமிழ் தேசிய புலவர் கூட்டம் என திராவிடத்தின் பல்வேறு கிளை பிரிவுகள் தமிழர்களை குழப்பத்தில் வைத்திருந்து தமது அரசியலை தமிழர்களுக்கு எதிராக செய்து வருகிறது தோழர்களே…

அப்படி ஒரு அநீதியான அரசபயங்கரவாத நிகழ்வு தான் ஜீலை 23 தாமிரபரணி அரசபயங்கரவாத படுகொலை தோழர்களே…

திராவிடம் தம் உண்மை முதலாளிகளாக சர்வதேசியம் தனக்கு கொடுத்த பணியையும் , தமிழக பூர்வ குடி அழிப்பு என்பதை தம் தலையாய கொள்கைய கொண்டு செயல்பட்டு வரும் திராவிடத்தின் மண்ணின் மக்கள் மீதான அடக்குமுறை அரசபயங்கரவாதம் தான் 17தமிழர் இனப்படுகொலை தோழர்களே…

ஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ் உட்பட பதினெழு தமிழர்கள் மீது திராவிட பாசிச இனவெறியர்களின் இன அழிப்பு அரசபயங்கரவாத படுகொலையை திராவிடத்தின் தலைமை அரசியல் பிரிவான திமுக மற்றும் கருணாநிதி அரசால் ஊதிய உயர்வு கேட்டு போராடிய தமிழர் இன பாட்டாளி வர்க்கத்தின் மீதான படுகொலை…

தோழர்களே …

உங்கள் மண்ணின் உங்களுக்கு எதிராக நடக்கும் அரசியல் சதுரங்கத்தில்

உங்கள் எதிரிகள் யார் ?
துரோகிகள் யார் ?
நண்பர்கள் யார் ?
எதிரிகளின் கங்காணிகள் யார் ?
உங்கள் எதிரிகளின் கூலிபடையாக செயல்படுவது யார் ?

என்பதை உணராமல் இருக்காதீர்கள் தோழர்களே…

அதனை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்….

ஆனால் அதனை இனம்கண்டு அதற்கு எதிரான சரியான அரசியல் சதுரங்கத்தை நகர்த்தினால் மட்டுமே இனமீட்சி சாத்தியம் தோழர்களே……

நன்றி

#தமிழர்நடுவம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *