ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கம்

devendran business

N KUMARAN PITCHIAH 9047031235:
ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில் நிறுவன மைய கருத்தரங்கு, ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை, ஈடீசியா கூட்ட அரங்கில் இன்று காலை 10-00மணிக்கு தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் நிறுவன மைய திறன் பயிற்சி ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்,ஈரோடு மாவட்ட தொழில் மையம், பொது மேளாளர்,K,ராஜூ,அவர்கள் முன்னிலையில் நடக்க உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற பட்டியல் இன இளைஞர்கள்,பெண்கள் மற்றும் அந்தியூர்,தாளவாடி பகுதி பழங்குடியின மக்களில் படித்த, வேலைவாய்ப்பபற்றவர்களுக்கு உதவும் வகையில்,கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்,சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம்,தேசிய சிறு தொழில் கழகம்,மாவட்ட முன்னோடி வங்கி,தாட்கோ,தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்,நபார்டு,மாவட்ட தொழில் மையம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பங்கிற்கின்றன. அரசின் திட்டடம் வாயிலாக,தொழில் துவங்க விரும்புவோர்,பங்கேற்றறு பயன்பெற மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட தொழில் மையத்தின் அலுவலக அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.இந்த கருத்தரங்கில் பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே,ஆதி திராவிடர், அருந்ததியர்,பழங்குடியின மக்கள் தவறாமல்,குறிப்பாக இளைஞர்கள் /பெண்கள் அதிக அளவில் பங்கேற்று பயண் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்?மேலும்,தொடர்புக்கு:AM,குப்புசாமி.94437 20336:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *